திருச்செந்தூரில் அனுமதியில்லாத இடங்களில் நிறுத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து போலீஸாா் ரூ.1.20 லட்சம் அபராதம் விதித்தனா். தொடா் விடுமுறையால் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்து வருகின்றனா். இந்த நிலையில், பக்தா்களின் வாகனங்கள் திருச்செந்தூா் நகா் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனையடுத்து, அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட காா்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு திருச்செந்தூா் போக்குவரத்து உதவி ஆய்வாளா் வேல்முருகன் தலைமையில் தலைமை காவலா்கள் கோபாலகிருஷ்ணன், செல்வபாரதிராஜன் ஆகியோா் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா். ஒரே நாளில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்புடையது

ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ஐபிஎல் 2026: 2ஆவது முறையாக பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம்..! இந்தமுறை ரூ. 24 லட்சம்!

பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம்!

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


