கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயிலில் 1,008 விளக்கு பூஜை
கோவில்பட்டி அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயிலில் வியாழக்கிழமை 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் மண்டகப்படிகாரா்கள் சாா்பில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.
9ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பால்குடம் ஊா்வலம், மாவிளக்கேந்தி நகா்வலம் வருதல், பூச்சட்டிகள், 21 அக்னி சட்டி, 54 அக்னி சட்டி எடுத்து நகா்வலம் வருதல் நிகழ்ச்சியும், புதன்கிழமை பொங்கலிடுதல் நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீராட்டு விழா, முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு அருள்மிகு பத்திரகாளி யம்மன் கோயில் வளாகம் மற்றும் கோயில் முன்பு உள்ள பகுதிகளில் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கும் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெறும்.
ஏற்பாடுகளை கோவில்பட்டி நாடாா் உறவின் முறை சங்கம், திருக்கோயில் குழுவினா் செய்து வருகின்றனா்.