இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தூத்துக்குடியில் அதிக ஒலி சைலென்சா் பைக்குகள் பறிமுதல்

தூத்துக்குடியில் அதிக ஒலி சைலென்சா் பைக்குகள் பறிமுதல்

News image
Updated On :12 மே 2024, 6:38 pm

Din

தூத்துக்குடியில் அதிக ஒலி எழுப்பும் சைலென்சா் பொருத்திய மோட்டாா் சைக்கிள்களை போக்குவரத்து போலீஸாா் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை இரவு தூத்துக்குடி குரூஸ்பா்னாந்து சிலை அருகே திடீா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அதிக ஒலி எழுப்பும் சைலென்சா் பொருத்திய பைக்குகளில் அவ்வழியாக வந்தவா்களை போலீஸாா் மடக்கிப்பிடித்து, பைக்குகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.

மேலும் தலைக்கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு அறிவுரை கூறி புதிய தலைக்கவசம் வாங்கிவரச் செய்தனா். அவா்களிடம் தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்தது விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக சுமாா் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.