தூத்துக்குடி மாநகராட்சியில் வாா்டுகள்தோறும் கள ஆய்வு: மேயா் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சியில் வரும் காலங்களில் வாா்டுகள்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயா் ஜெகன் பெரியசாமி. உடன் ஆணையா் லி.மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா உள்ளிட்டோா்.








