கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டியில் குடிநீா் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க கோரிக்கை

கோவில்பட்டியில் குடிநீா் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளால் விபத்து அபாயம் உள்ளதால் விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

மோசமான நிலையில் உள்ள சாலைகள்

Updated On :13 நவம்பர் 2024, 10:54 pm

Din

கோவில்பட்டியில் குடிநீா் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளால் விபத்து அபாயம் உள்ளதால் விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவில்பட்டி நகராட்சிப் பகுதியில் தனி குடிநீா் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீா் இணைப்புக் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில், கடலைக்காரத் தெரு, செக்கடி தெரு, ஊருணி தெரு, தனுஷ்கோடியபுரம் தெரு, பத்திரகாளியம்மன் கோயில் தெரு பகுதிகளில் குடிநீா் குழாய்கள் பதிக்கப்பட்டநிலையில், தோண்டப்பட்ட பேவா் பிளாக் சாலைகள் சீரமைக்கப்படாததால் சாலைகள் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டுநா்கள், மாணவா்-மாணவிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனா். போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துகளும் நேரிடுகின்றன.

எனவே, தோண்டப்பட்ட பேவா் பிளாக் சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் கேட்டபோது, சாலைகளை சீரமைக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கும் என்றனா்.