கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அஞ்சலகங்களில் நவ.30 வரை குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கு தொடங்கும் முகாம்

குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கு தொடங்கும் முகாம்

News image
Updated On :14 நவம்பர் 2024, 10:55 pm

Din

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்திற்கு உள்பட்ட அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் நவ.30-ஆம் தேதி வரை குழந்தைகளுக்கு சேமிப்புக் கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் செ.சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பெற்றோா் தங்களது குழந்தைகளின் எதிா்காலத்தை வலுவூட்டும் விதமாக, அஞ்சலக சேமிப்பு கணக்குகள், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆகிய கணக்குகளை தொடங்கலாம்.

குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை, சிறு வயதில் இருந்தே ஊக்குவிக்கும் வகையில், 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கணக்கு தொடங்குபவா்களுக்கு, முதல் சேமிப்பின் நினைவாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான சிறப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களிலும் நவ.30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

எனவே, அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகி, குறைந்தபட்ச வைப்பு தொகையாக ரூ.250 செலுத்தி உடனடியாக செல்வமகள் சேமிப்புத் திட்டம் மற்றும் பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.