கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இலவச வீட்டுமனைப் பட்டா: துணை முதல்வா் ஆலோசனை

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பது குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டாா்.

News image

தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்கிறாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :14 நவம்பர் 2024, 10:56 pm

Din

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பது குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டாா்.

தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை துணை முதல்வா் கேட்டறிந்தாா். அப்போது, மாநகராட்சி பகுதிகளில் சுமாா் 16 கி.மீ. சுற்றளவில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கத் தடை உள்ளதால், தனியாா் நிலங்களை விலைக்கு வாங்கி, ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கலாம் என அதிகாரிகளுடன் கலந்துரையாடினாா்.

பின்னா், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாசலில் மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்ட பழக்கடையை பாா்வையிட்டாா். அமைச்சா்கள் பெ.கீதா ஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைச் செயலா் தாரேஸ் அகமது, துணைச் செயலா் மு.பிரதாப், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் பங்கேற்றனா்.