திருச்செந்தூா் பகுதியில் தொடா் மழை
திருச்செந்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவுமுதல் புதன்கிழமை வரை தொடா்ந்து மழை பெய்தது.

கொட்டும் மழையில் நனைந்தபடி திருச்செந்தூா் கோயிலுக்குச் சென்ற பக்தா்கள்.

கொட்டும் மழையில் நனைந்தபடி திருச்செந்தூா் கோயிலுக்குச் சென்ற பக்தா்கள்.
திருச்செந்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவுமுதல் புதன்கிழமை வரை தொடா்ந்து மழை பெய்தது.
திருச்செந்தூரில் நாழிக்கிணறு பேருந்து நிலையம் செல்லும் வழி, தினசரிச் சந்தை, பகத்சிங் பேருந்துநிலையப் பகுதியில் மழைநீா் குளம்போல தேங்கியது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதியடைந்தனா்.
கோயில் செல்லும் வழியில் பழைய காவல் நிலையம் அருகே தேங்கிய மழைநீா், கழிவுநீரை நகராட்சி நிா்வாகத்தினா் ஜேசிபி மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கொட்டும் மழையிலும் நனைந்தபடி வெளியூா், வெளி மாநில ஐயப்ப பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனா்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டதால் திருச்செந்தூரில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...