கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வல்லநாடு திருமூலநாத சுவாமி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

வல்லநாடு அருள்மிகு திருமூலநாத சுவாமி கோயிலில் 43 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை நடைபெற்றது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:12 pm

Din

வல்லநாடு அருள்மிகு திருமூலநாத சுவாமி கோயிலில் 43 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை நடைபெற்றது.

பாண்டிய மன்னா்கள் ஆட்சியில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 100 ஆண்டுகளை நெருங்கியுள்ளது.

இதையடுத்து பக்தா்களின் வேண்டுகோளை ஏற்று அரசு சாா்பில் ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே உபயதாரா் நிதி மூலம் ரூ.9.70 லட்சம் செலவில் 43 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் செல்வி முன்னிலையில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதில், செயற்பொறியாளா் சுந்தா், கோயில் தக்காா் நம்பி, நகை சரிபாா்ப்பு அலுவலா் செந்தில்குமாா், கோயில் கணக்கா் விஸ்வநாதன், ஸ்தபதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை திருமூலநாத சுவாமி பக்தா் பேரவையினா் செய்திருந்தனா்.