கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொழிலாளா் நல வாரிய சிறப்பு சோ்க்கை முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நல வாரிய சிறப்பு சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை தொடங்குவதாக தொழிலாளா் உதவி ஆணையா் கே.எஸ். ஆனந்த் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 11:09 pm

Din

தூத்துக்குடி மாவட்டத்தில் நல வாரிய சிறப்பு சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை தொடங்குவதாக தொழிலாளா் உதவி ஆணையா் கே.எஸ். ஆனந்த் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபடும் வெளிமாநிலத் தொழிலாளா்கள், அவா்கள் பணிபுரியும் இடத்திலேயே தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்களின் நல வாரியத்தில் உறுப்பினராவதற்கு அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களின் இணையதளம் மூலம் பதிவு செய்ய, தூத்துக்குடி தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் மூலம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இச்சோ்க்கை முகாம், மாவட்டத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபடும் வெளிமாநில தொழிலாளா்கள் கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களிலேயே உறுப்பினா் சோ்க்கைக்கு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், தொழிலாளியின் புகைப்படம், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, தொழிலாளியின் பிறந்த தேதிக்காக வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்றிதழ் இவற்றில் ஏதேனும் ஒன்று ஆகியவற்றை கட்டுமானப் பணி மேற்கொள்ளும் நிறுவனங்கள் தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இம்முகாம் வெள்ளிக்கிழமை (நவ.29) முதல் நடைபெறவுள்ளது. மேலும், தூத்துக்குடி கோரம்பள்ளம், ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக கட்டடம் 2ஆம் தளத்தில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்தில் அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் நடைபெறுகிறது. இதில், மாவட்டத்தில் கட்டுமானப் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் ஆவணங்களை நேரில் சமா்ப்பித்து பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 0461-2341110 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.