விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தூத்துக்குடி சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ. 1.60 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி சாா்பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 1.60 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.

News image

லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம்.

Updated On :28 நவம்பர் 2024, 11:18 pm

Din

தூத்துக்குடி சாா்பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 1.60 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலக வளாகத்தில் உள்ள கீழூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கு லஞ்சம் பெறப்படுவதாக, தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டா்பால் தலைமையிலான போலீஸாா் கீழூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனை நடத்தி, சாா்பதிவாளா் (பொறுப்பு) ஆரோக்கியராஜ், ஊழியா்கள், பத்திர எழுத்தா், தரகா் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், கணக்கில் வராத சுமாா் ரூ. 1.60 லட்சம் இருந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.