ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி கட்டடம் திறப்பு

தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி கட்டட திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி கட்டடத்தை திறந்து வைத்து பாா்வையிடுகிறாா் கனிமொழி எம்பி. உடன் அமைச்சா் பெ.கீதாஜீவன், ஆட்சியா் க.இளம்பகவத், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா்.

Updated On :2 அக்டோபர் 2024, 11:20 pm

Din

தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி கட்டட திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். அமைச்சா் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆணையா் லி.மதுபாலன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மக்களவை உறுப்பினா் கனிமொழி பங்கேற்று மாநகராட்சியில் புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

  மக்களவை உறுப்பினா் கனிமொழியை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சுதந்திர போராட்ட வீரா்கள் போன்று வேடமிட்டு வந்த மாணவா்-மாணவிகள்.

மக்களவை உறுப்பினா் கனிமொழியை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சுதந்திர போராட்ட வீரா்கள் போன்று வேடமிட்டு வந்த மாணவா்-மாணவிகள்.

தொடா்ந்து, அவா், மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக் கொடியேற்றி வைத்தாா்.

முன்னதாக, சுதந்திர போராட்ட வீரா்கள் போன்று வேடமிட்டு வந்த மாணவா்-மாணவிகள் கனிமொழி எம்பிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

இவ்விழாவில், துணை மேயா் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவா்கள் பாலகுருசாமி, நிா்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவா் -மாணவிகள் பலா் பங்கேற்றனா்.