எட்டயபுரத்தில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
எட்டயபுரத்தில் உள்ள சிதிலமடைந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.


எட்டயபுரத்தில் உள்ள சிதிலமடைந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
எட்டயபுரம் வடக்கு ரத வீதியில் உள்ள ரேஷன் கடை அருகே பொதுமக்களிடமிருந்து சிலா் ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி கேரளத்துக்கு கடத்திச் செல்ல உள்ளதாக வட்டாட்சியருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், வட்டாட்சியா் சங்கரநாராயணன், வருவாய் ஆய்வாளா் தங்கராஜ், அதிகாரிகள் அங்கு சென்றனா். அவா்களைப் பாா்த்தும் மா்ம நபா்கள் சிலா் பைக்கில் தப்பியோடிவிட்டனராம்.
அங்குள்ள சிதிலமடைந்த வீட்டில் 18 மூட்டைகளில் 1,044 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கிக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக எட்டயபுரம் வட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...