கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்செந்தூா் கோயில் புதிய தங்கும் விடுதி பக்தா்கள் பயன்பாட்டிற்கு அனுமதி

திருச்செந்தூா் கோயிலில் அண்மையில் திறக்கப்பட்ட தங்கும் விடுதியில் பக்தா்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:32 pm

Din

திருச்செந்தூா் கோயிலில் அண்மையில் திறக்கப்பட்ட தங்கும் விடுதியில் பக்தா்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் ரூ.48.36 கோடியில் கட்டப்பட்ட பக்தா்கள் தங்கும் விடுதியை தமிழக முதல்வா் ஸ்டாலின், கடந்த 14-ஆம் தேதி காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

கந்த சஷ்டி விழா தொடங்கவுள்ளதையொட்டி முதல்கட்டமாக, இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 குடில்கள் பக்தா்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த குடில்களுக்கு 24 மணி நேர வாடகையாக ரூ. 2 ஆயிரம் மற்றும் முன்பணம் ரூ. 2 ஆயிரம் என மொத்தம் ரூ. 4 ஆயிரம் நேரடி பதிவாக கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அறையை காலிசெய்யும்போது முன்பணம் திருப்பி அளிக்கப்படும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.