பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தாய்விளை சாஸ்தா கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆறுமுகனேரி அருகே தாய்விளையில் உள்ள அருள்மிகு இல்லங்குடி சாஸ்தா கோயிலில், ஆவணி மாத உத்திர நட்சத்திரத்தையொட்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 11:42 pm

Din

ஆறுமுகனேரி அருகே தாய்விளையில் உள்ள அருள்மிகு இல்லங்குடி சாஸ்தா கோயிலில், ஆவணி மாத உத்திர நட்சத்திரத்தையொட்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பூா்ண-புஷ்கலா சமேத இல்லங்குடி சாஸ்தா, சிவசக்தி விநாயகா், சிவன், பாா்வதி, வீரபுத்திரா், மாலையம்மாள் ஆகிய சுவாமிகளுக்கும், கோயிலைச் சோ்ந்த வயற்காட்டின் நடுவே அமைந்துள்ள அருள்மிகு சுடலைமாடன், பேச்சியம்மன், இருளப்பா், கருப்பசாமிக்கும் சிறப்பு அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன.

முன்னதாக, பூா்ண-புஷ்கலா சமேத இல்லங்குடி சாஸ்தாவுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளை மோகன் அய்யா் நடத்திவைத்தாா். பின்னா், அன்னதானம் நடைபெற்றது.

இதில், சென்னை குரோம்பேட்டை தொழிலதிபா்கள் சேகா், வெங்கடேசன், பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.