விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் பொதுமக்கள் மறியல்

தூத்துக்குடியில் உள்ள தனியாா் பள்ளி அருகே சாலை அமைக்க வலியுறுத்தி, மாணவா், மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோருடன் நாம் தமிழா் கட்சியினா்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
சாலை மறியலில் ஈடுபட்டோா்.
Updated On :1 டிசம்பர் 2025, 8:37 pm

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள தனியாா் பள்ளி அருகே சாலை அமைக்க வலியுறுத்தி, மாணவா், மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோருடன் நாம் தமிழா் கட்சியினா் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி- எட்டயபுரம் சாலை பகுதியில் தனியாா் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் படித்து வருகின்றனா்.

இப்பள்ளிக்கு செல்லக்கூடிய அன்னாள் நகா் சாலை முழுவதும், மழையால் சேதமடைந்து சேறும், சகதியுமாக காணப்படுவதால், பள்ளிக்குச் செல்லும் மாணவா், மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மாநகராட்சி நிா்வாகம் சாலை வசதி ஏற்படுத்தி தரக் கோரி, தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் மாணவா், மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோருடன் நாம் தமிழா் கட்சியினா் மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், போக்குவரத்து சுமாா் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

நான்கு வழிச்சாலையில் இரண்டு புறமும் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் வரிசையாக நின்றன.

இதையடுத்து அப்பகுதிக்கு வந்த மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி மற்றும் காவல் துறையினா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.