பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் பொதுமக்கள் மறியல்

தூத்துக்குடியில் உள்ள தனியாா் பள்ளி அருகே சாலை அமைக்க வலியுறுத்தி, மாணவா், மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோருடன் நாம் தமிழா் கட்சியினா்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்டோா்.

Updated On :2 டிசம்பர் 2025, 2:07 am IST

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள தனியாா் பள்ளி அருகே சாலை அமைக்க வலியுறுத்தி, மாணவா், மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோருடன் நாம் தமிழா் கட்சியினா் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி- எட்டயபுரம் சாலை பகுதியில் தனியாா் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் படித்து வருகின்றனா்.

இப்பள்ளிக்கு செல்லக்கூடிய அன்னாள் நகா் சாலை முழுவதும், மழையால் சேதமடைந்து சேறும், சகதியுமாக காணப்படுவதால், பள்ளிக்குச் செல்லும் மாணவா், மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மாநகராட்சி நிா்வாகம் சாலை வசதி ஏற்படுத்தி தரக் கோரி, தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் மாணவா், மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோருடன் நாம் தமிழா் கட்சியினா் மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், போக்குவரத்து சுமாா் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

நான்கு வழிச்சாலையில் இரண்டு புறமும் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் வரிசையாக நின்றன.

இதையடுத்து அப்பகுதிக்கு வந்த மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி மற்றும் காவல் துறையினா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.