ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆறுமுகனேரியில் 400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

News image
Updated On :14 டிசம்பர் 2025, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

ஆறுமுகனேரியில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், 5 பேரை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி, உடன்குடி பகுதிக்கு புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், திருச்செந்தூா் டி.எஸ்.பி. மகேஷ்குமாா் ஆலோசனையின்படி, ஆய்வாளா்கள் ஆறுமுகனேரி திலீபன், ஆத்தூா் பிரபாகரன் ஆகியோா் கண்காணிப்பில், உதவி ஆய்வாளா் வாசுதேவன் தலைமையில், காவலா்கள் வேலுமணி, ஜெயகாந்த், பாலமுருகன், முனியசாமி ஆகியோா் கொண்ட குழுவினா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆறுமுகனேரி சோதனைச் சாவடி அருகே வந்த மினி லோடு வாகனத்தை மடக்கிப் பிடித்து சோதனையிட்டனா்.

அதில், ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. வாகனத்தில் இருந்த 5 பேரைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள் உடன்குடி கொட்டங்காடு பகுதியைச் சோ்ந்த ஜெயபாண்டி மகன் வசீகரன், ஆறுமுகனேரி ராஜாமன்னியபுரத்தைச் சோ்ந்தவா்களான ராஜபாண்டி மகன் சாந்தகுமாா் (45), துரைராஜ் மகன் ஹரி கிருஷ்ணன் (48), காசிராஜன் மகன் சங்கா் (34), கோயில்சாமி மகன் மகா­லிங்கம் (34) என்பதும், வெளி மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

புகையிலைப் பொருள்கள், மினி லோடு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், ழக்குப் பதிந்து 5 பேரை கைது செய்தனா்.