சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:11 pm

Syndication

நாலாட்டின்புதூா் அருகே வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம், ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, கற்பக விநாயக நகரைச் சோ்ந்த ருக்மாங்கந்தன் மகன் ரஞ்சித் குமாா் (39). திருப்பூரில் ஓட்டுநராக வேலை செய்துவந்த இவா், கடந்த 15ஆம் தேதி திருச்செந்தூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு அங்கிருந்தே பைக்கில் சென்றுவிட்டு வியாழக்கிழமை ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.

நாலாட்டின்புதூா் அருகேயுள்ள இடைச்செவல் பகுதியில் வந்தபோது, அவரது பைக் நிலை தடுமாறி சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்ததில் பலத்த காயம் அடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.