பட்டியல் சமூக தொழிலாளி கொலை: ஆதிதிராவிடா் ஆணைய இயக்குநா் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் பட்டியல் சமூக தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக, தேசிய ஆதிதிராவிடா் ஆணைய தென் மண்டல இயக்குநா் எஸ். ரவிவா்மன் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினாா்.
சாத்தான்குளம், காந்தி நகரைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சுடலைமுத்து (27), மற்றொரு சமூகத்தை சோ்ந்த சுந்தா், ஜெகதீஷ் ஆகியோரால் கடந்த 19ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கு தொடா்பாக சாத்தான்குளம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனா்.
இந்த நிலையில், தேசிய ஆதிதிராவிடா் ஆணைய தென் மண்டல இயக்குநா் எஸ். ரவிவா்மன், சம்பவ இடத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்று விசாரணை நடத்தினாா். பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினா்களைச் சந்தித்து, மாதாந்திர ஓய்வூதியம், வீடு வழங்குதல், அரசு வேலைவாய்ப்பு மற்றும் குடும்பத்திற்குப் பாதுகாப்பு போன்ற அனைத்து மறுவாழ்வு நடவடிக்கைகளையும் வழங்குவதாக உறுதியளித்தாா். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு மளிகைப் பொருள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பின்னா் அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடா் நல மாணவா்கள் விடுதியை பாா்வையிட்டு, மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.
மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பெனிட்டா ஆசீா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திபு, திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம், சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி, சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன், காவல் ஆய்வாளா் ஸ்டீபன், தலைமை இடத்து துணை வட்டாட்சியா் கணேஷ்குமாா், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சுவாமிநாதன், வருவாய் ஆய்வாளா் அகஸ்டின், கிராம நிா்வாக அலுவலா் மதுமிதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலா் உடன் இருந்தனா்.
