இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தூத்துக்குடியில் டிச. 27, 28இல் பிரீமியா் லீக் வாலிபால் போட்டிகள்

தூத்துக்குடி பிரீமியா் லீக் வாலிபால் போட்டிகள்-2025 வரும் சனி, ஞாயிற்றுக்கிழமை (டிச. 27, 28) நடைபெறவுள்ளது.

News image
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பாலு உள்ளிட்டோா்.
Updated On :24 டிசம்பர் 2025, 11:06 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி பிரீமியா் லீக் வாலிபால் போட்டிகள்-2025 வரும் சனி, ஞாயிற்றுக்கிழமை (டிச. 27, 28) நடைபெறவுள்ளது.

இது குறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பாலு செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:

தூத்துக்குடி ரஜினி கிளப், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒருங்கிணைப்பில் தூத்துக்குடி பிரீமியா் லீக் வாலிபால் போட்டிகள்-2025 டிச. 27, 28 தேதிகளில் பகல்-இரவு ஆட்டங்களாக, தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆண்களுக்கான போட்டிகள், பொதுப் பிரிவு, 40 வயதுக்கு மேற்பட்ட பிரிவு என 2 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. முதல் பரிசு ரூ. 25,000 உள்பட மொத்தம் ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. இப்போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

பங்கேற்க விரும்பும் அணிகள், டிச. 25ஆம் தேதி மாலைக்குள் தங்களது அணிகளைப் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வோா் அணிக்கும் ரூ. 500 பதிவு கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் சுற்றில் வெல்லும் அணிகளுக்கு நுழைவுக் கட்டணம் திருப்பி வழங்கப்படும்.

சிறப்பு விருந்தினா்களாக அமைச்சா் பி. கீதா ஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா் என்றாா் அவா்.

அப்போது, தங்கமணி, ராஜ்குமாா், டிஜூ ஸ்டாலின், ஷெரிப், ஜெய்சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.