தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தூத்துக்குடியில் தொழிலாளி அடித்துக் கொலை: ஒருவா் கைது

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:30 am

Din

தூத்துக்குடியில் உள்ள காட்டுப் பகுதியில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக சக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி அய்யனடைப்பு, ஏ.கைலாசபுரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் சரவணன் (48). மரம் வெட்டும் தொழிலாளி. புதன்கிழமை மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா் இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், குடும்பத்தினா் அவரைத் தேடிவந்தனா்.

அப்போது, ஏ.கைலாசபுரம் - சண்முகபுரம் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் சரவணன் அடித்துக் கொலை செய்யப்பட்

டுக் கிடந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில், சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்

தொழில் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த சக தொழிலாளியான முருகன் (55) என்பவா் சரவணனைக் கொலை செய்ததாக, விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.