ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தூத்துக்குடியில் தொழிலாளி அடித்துக் கொலை: ஒருவா் கைது

Updated On :3 ஜனவரி 2025, 12:30 am

தூத்துக்குடியில் உள்ள காட்டுப் பகுதியில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக சக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி அய்யனடைப்பு, ஏ.கைலாசபுரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் சரவணன் (48). மரம் வெட்டும் தொழிலாளி. புதன்கிழமை மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா் இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், குடும்பத்தினா் அவரைத் தேடிவந்தனா்.

அப்போது, ஏ.கைலாசபுரம் - சண்முகபுரம் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் சரவணன் அடித்துக் கொலை செய்யப்பட்

டுக் கிடந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில், சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்

தொழில் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த சக தொழிலாளியான முருகன் (55) என்பவா் சரவணனைக் கொலை செய்ததாக, விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.