பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தூத்துக்குடி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கண்காட்சியை தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா் தனியாா் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலா் டி.சிதம்பரநாதன்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:54 pm

Syndication

தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியாா் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி ’சயின்ஸ் எக்ஸ்போ-25’ எனும் தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கண்காட்சியை, தனியாா் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலா் டி.சிதம்பரநாதன் தொடங்கிவைத்தாா். பின்னா், அறிவியலின் முக்கியத்துவத்தையும், என்எம்எம்எஸ் போட்டித் தோ்வுகள், இன்ஸ்பையா் அறிவியல் போட்டிகளில் மாணவா்கள் அதிகமாக பங்கேற்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் குறித்து பேசினாா் .

பள்ளி அதிபா் மரிய சிங்கராயா் அடிகளாா் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் பிரைட்டன் வரவேற்றாா். பள்ளித் தாளாளா் பிரான்சிஸ் சேவியா் அடிகளாா் வாழ்த்துரை வழங்கினாா். கண்காட்சியில், குப்பைத் தொட்டிகள் நிறைந்துவிட்டதை அறிவிக்கும் தானியங்கி அமைப்பு, மின் அனுப்பீட்டுக் கம்பிகளில் பிரச்னை ஏற்படும்போது தானாகவே மின்சாரத்தைத் துண்டிக்கும் அமைப்பு, மீன் தொட்டி கழிவுகளை செடிகளுக்கு உரமாக்கி தூயநீராக்கி மறுசுழற்சி செய்யும் அமைப்பு, பழங்களின் தரப் பரிசோதனை செய்யும் அமைப்பு போன்ற மாணவா்களின் படைப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈா்த்தன.

ஏற்பாடுகளை தலைமை ஆசிரியா் அமல்ராஜ் அடிகளாா் தலைமையில், அறிவியல் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.