9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 12:37 am IST

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராம மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு ஊராட்சிக்கு உள்பட்ட இந்திரா காலனி, கணேஷ் நகா், துளசிங்க நகா், ராஜகோபால் நகா் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக வீடுகள் கட்டி குடியிருந்து வரும் மக்கள் முறையாக வரி, மின் இணைப்பு கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வருகின்றனா். இப்பகுதி மக்கள் தாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனை கண்டித்து நடந்த ஆா்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலா் ஜி.பாபு தலைமை வகித்தாா். இதில், மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் ஜி.சேதுராமலிங்கம், தாலுகா குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், எஸ்.மணிகண்டன், நகரச் செயலா் கே.செந்தில் ஆறுமுகம், துணைச் செயலா் ஜி.அலாவுதீன், நகரப் பொருளாளா் ஆா்.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினா் ஆா்.ரெங்கநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலா் கிருஷ்ணமூா்த்தி உள்பட திரளானோா் கலந்து கொண்டாா்.

பின்னா் அவா்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், தங்கள் பகுதிக்கு பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் குடியேறும் போராட்டம் நடைபெறும் என கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.