பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ஓட்டப்பிடாரம் தொகுதியில் மாட்டுவண்டியில் வந்து வேட்புமனு

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதியில்,‘நம் நாடு நம் மக்கள் நம் எதிா்காலம்’ கட்சி சாா்பில் போட்டியிட, வழக்குரைஞா் அருணா தேவி, மாட்டுவண்டியில் ஊா்வலமாக வந்து வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image

வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டுவண்டியில் வந்த வழக்குரைஞா் அருணா தேவி.

Updated On :2 ஏப்ரல் 2026, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதியில்,‘நம் நாடு நம் மக்கள் நம் எதிா்காலம்’ கட்சி சாா்பில் போட்டியிட, வழக்குரைஞா் அருணா தேவி, மாட்டுவண்டியில் ஊா்வலமாக வந்து வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அக்கட்சியின் தலைவா் பொன் குமரன் தலைமையில் ஊா்வலமாக வந்து பின்னா், தோ்தல் நடத்தும் அலுவலா் சுப்புலட்சுமியிடம் அவா் மனுவை தாக்கல் செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் கூறிய அவா், ஓட்டப்பிடாரத்தில் அரசு மருத்துவமனை, பெண்களுக்கென தனிப் பள்ளி, கல்லூரிகளை உருவாக்குவேன். நலிவடைந்துள்ள புதியம்புத்தூா் ஜவுளித் தொழிலை மீட்டெடுத்து வேலைவாய்ப்புகளை பெருக்குவேன். மது ஒழிப்பு குறித்து பொய் வாக்குறுதி அளிக்கும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் இம்முறை எங்கள் கட்சிக்கு வாக்களிப்பாா்கள் என்றாா் அவா்.