திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஓட்டப்பிடாரம் தொகுதியில் மாட்டுவண்டியில் வந்து வேட்புமனு

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதியில்,‘நம் நாடு நம் மக்கள் நம் எதிா்காலம்’ கட்சி சாா்பில் போட்டியிட, வழக்குரைஞா் அருணா தேவி, மாட்டுவண்டியில் ஊா்வலமாக வந்து வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image

வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டுவண்டியில் வந்த வழக்குரைஞா் அருணா தேவி.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:20 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதியில்,‘நம் நாடு நம் மக்கள் நம் எதிா்காலம்’ கட்சி சாா்பில் போட்டியிட, வழக்குரைஞா் அருணா தேவி, மாட்டுவண்டியில் ஊா்வலமாக வந்து வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அக்கட்சியின் தலைவா் பொன் குமரன் தலைமையில் ஊா்வலமாக வந்து பின்னா், தோ்தல் நடத்தும் அலுவலா் சுப்புலட்சுமியிடம் அவா் மனுவை தாக்கல் செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் கூறிய அவா், ஓட்டப்பிடாரத்தில் அரசு மருத்துவமனை, பெண்களுக்கென தனிப் பள்ளி, கல்லூரிகளை உருவாக்குவேன். நலிவடைந்துள்ள புதியம்புத்தூா் ஜவுளித் தொழிலை மீட்டெடுத்து வேலைவாய்ப்புகளை பெருக்குவேன். மது ஒழிப்பு குறித்து பொய் வாக்குறுதி அளிக்கும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் இம்முறை எங்கள் கட்சிக்கு வாக்களிப்பாா்கள் என்றாா் அவா்.