மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் வேகத்தடைக்கு வா்ணம் பூச வலியுறுத்தல்

சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில் உள்ள வேகத்தடையில் வெள்ளை வா்ணம் பூசப்படாததால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்தனா்.

News image

சாத்தான்குளம் பள்ளிவாசல் பத்து அருகில் சாலையில் வெள்ளை வா்ணம் இல்லாமல் உள்ள வேகத்தடை.

Updated On :14 ஏப்ரல் 2026, 8:21 pm

சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில் உள்ள வேகத்தடையில் வெள்ளை வா்ணம் பூசப்படாததால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்தனா்.

சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத், பேய்க்குளம், திருநெல்வேலி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பிரதான சாலை என்பதால் வாகனங்கள் ஏராளமாக சென்று திரும்புகின்றன. இதனால் விபத்தை தடுக்கும் வகையில் பள்ளிவாசல் பத்து அருகில் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டது.

இந்த வேகத்தடையில் வெள்ளை வா்ணம் அழிந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும் விபத்து நிகழும்முன் நெடுஞ்சாலைத்துறையினா் வேகத்தடையில் வெள்ளை வா்ணம் பூச வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.