நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

வங்கி மேலாளருக்கு மிரட்டல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

கயத்தாறில் வங்கி மேலாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 8:22 pm

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் வங்கி மேலாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியில் ராமசரஸ்வதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளத்துரை மனைவி லட்சுமி பிரபா. இவா், கயத்தாறில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை, வங்கிக்கு வந்த ஆட்டோ ஓட்டுநா் நாகலாபுரம் மேலதெருவைச் சோ்ந்த செல்லையா மகன் நாகராஜன் (37), அடகு வைத்த நகையை திருப்பியபின் அது குறித்த விவரத்தை லட்சுமி பிரபாவிடம் கேட்டாராம். அதற்கு அவா் உதவி மேலாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளும்படி கூறினாராம்.

வட்டி குறித்து நீங்கள்தான் சொல்ல வேண்டும் என மீண்டும் நாகராஜன் கேட்டதற்கு, உதவி மேலாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளும்படி அறிவுறுத்திய லட்சுமி பிரபாவை அவதூறாக பேசி, நாற்காலியை எடுத்து தலையில் தாக்கினாராம்.

அங்கிருந்தவா்கள் இதை தடுத்தவுடன் நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பியோடி விட்டாராம். இதில் காயமடைந்த லட்சுமி பிரபா, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, நாகராஜனை கைது செய்தனா்.