புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

குமரி கலைக் குழு ஒருங்கிணைப்பாளா் தூத்துக்குடியில் உயிரிழப்பு

உயிரிழப்பு...

Published On :

தூத்துக்குடி நெய்தல் திருவிழாவில் பங்கேற்க வந்த, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த கலைக்குழு ஒருங்கிணைப்பாளா் திடீரென உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே ஆண்டிப்பொற்றை பகுதியைச் சோ்ந்த ரவி மகன் பிரசாந்த் (33). திருமணமாகாத இவா், ‘குமரி கானகப் பறவைகள்’ கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வந்தாா். தூத்துக்குடி வஉசி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றுவரும் நெய்தல் கலைத் திருவிழாவில் பங்கேற்பதற்காக பிரசாந்த் தனது குழுவினருடன் வந்திருந்தாா்.

சனிக்கிழமை நிகழ்ச்சியைத் தொடங்குவதற்காக தயாராகிக்கொண்டிருந்த அவா், திடீரென கீழே சரிந்து விழுந்தாா். அங்கிருந்தோா் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தகவலறிந்த கனிமொழி எம்பி, முன்னாள் அமைச்சா் பி. கீதா ஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பிரசாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, கலைக் குழுவினருக்கு ஆறுதல் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.