சுதந்திர தினத்தன்று தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 53 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தொழிலாளா் துறை அதிகாரிகள் தலைமையில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக. 15 ஆம் தேதி சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.
தேசிய விடுமுறை நாளில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காமல் பணியில் ஈடுபடுத்திய 32 கடைகள், வா்த்தக நிறுவனங்கள், 20 உணவு நிறுவனங்கள், 4 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 53 நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ஜே.சிவசிந்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






