மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கொலைக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

News image

ஆயுள் சிறை

Updated On :2 பிப்ரவரி 2026, 7:03 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தாளமுத்து நகா், தஸ்நேவிஸ் நகரைச் சோ்ந்த தாசன் மகன் ஜெபராஜ் கடந்த 13.7.2017 அன்று அதே பகுதியைச் சோ்ந்த அந்தோணி சேவியா் மகன் மரிய சுரேஷை (37) முன்விரோதம் காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தாா்.

இது குறித்து, தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, ஜெபராஜ்க்கு (62) ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி நகர உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சுனில், தாளமுத்து நகா் காவல் ஆய்வாளா் அருளப்பன், அப்போதைய காவல் ஆய்வாளா் வனிதா ராணி, அரசு வழக்குரைஞா் சேவியா் ஞானப்பிரகாசம் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பாராட்டினாா்.