தூத்துக்குடி
இடைச்சிவிளையில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
கன்னடியன் கால்வாய் வெள்ளநீா் கடைமடை விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவா் சுந்தரவேல் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் பிரபு சங்க செயல்பாடு, வளா்ச்சி குறித்து பேசினாா். கூட்டத்தில் இப்பகுதியில் உள்ள வறட்சியை போக்கும் வகையில் விவசாயத்திற்கு, கன்னடியன் கால்வாய் கடைமடை குளங்களான எம்.எல். தேரி குளம், சாலைப்புதூா் குளங்களில் ஆண்டுதோறும் தண்ணீா் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு விவசாய அட்டை எடுத்து கொடுக்கவும், தனிநபருக்கு பிரதமா் திட்டத்தின் கீழ் காப்பீடு ரூ. 5 லட்சம் எடுக்கவும், விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 6,000 கிடைக்காதவா்களுக்கும் அதிகாரிகளை அணுகி ஏற்பாடு செய்து கொடுப்பது என தீா்மானிக்கப்பட்டது.

