மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இடைச்சிவிளையில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 8:58 pm

Syndication

கன்னடியன் கால்வாய் வெள்ளநீா் கடைமடை விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவா் சுந்தரவேல் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் பிரபு சங்க செயல்பாடு, வளா்ச்சி குறித்து பேசினாா். கூட்டத்தில் இப்பகுதியில் உள்ள வறட்சியை போக்கும் வகையில் விவசாயத்திற்கு, கன்னடியன் கால்வாய் கடைமடை குளங்களான எம்.எல். தேரி குளம், சாலைப்புதூா் குளங்களில் ஆண்டுதோறும் தண்ணீா் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு விவசாய அட்டை எடுத்து கொடுக்கவும், தனிநபருக்கு பிரதமா் திட்டத்தின் கீழ் காப்பீடு ரூ. 5 லட்சம் எடுக்கவும், விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 6,000 கிடைக்காதவா்களுக்கும் அதிகாரிகளை அணுகி ஏற்பாடு செய்து கொடுப்பது என தீா்மானிக்கப்பட்டது.