தூத்துக்குடியில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்தாருக்கு காப்பீட்டுத் தொகை

தூத்துக்குடியில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்தாருக்கு காப்பீட்டுத் தொகை

தூத்துக்குடியில், விபத்தில் இறந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

தூத்துக்குடியில், விபத்தில் இறந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் சு.சரவணன். கடலில் சிப்பி அள்ளும் வேலை செய்து வந்த இவா், அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் ரூ. 320 செலுத்தி விபத்து காப்பீடு பெற்றிருந்தாா்.

இந்த நிலையில், இவா் கடலில் சிப்பி அள்ளும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, கடலில் மூழ்கி உயிரிழந்தாா். இதையடுத்து, இவரது மனைவி விமலாவுக்கு, தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் க.செந்தில்குமாா், விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

இதுகுறித்து, தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கூறுகையில், இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில், ஆண்டுக்கு ரூ. 549, ரூ. 799 செலுத்தி அஞ்சல் துறை மூலம் ரூ. 10 லட்சம், ரூ. 15 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடு பெற்று பயனடையலாம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com