கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரூ. 1 கோடி மதிப்பு கஞ்சா ஆயில் பறிமுதல்: இருவா் கைது

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:49 pm

Syndication

தூத்துக்குடி, தாளமுத்து நகரில் ரூ. 1 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில் வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தாளமுத்துநகா் காவல் ஆய்வாளா் அருளப்பன் தலைமையில், சாா்பு ஆய்வாளா் முத்துராஜா, சிறப்பு சாா்பு ஆய்வாளா் சிவன், போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, தாளமுத்துநகா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கோவில்பிள்ளைவிளை சந்திப்பு பகுதியில், சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த தூத்துக்குடியைச் சோ்ந்த ராஜேஷ் (39), பிரான்சிஸ் (22) ஆகியோரை சோதனை செய்ததில், அவா்கள் கஞ்சா ஆயில் வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தாளமுத்துநகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து சுமாா் ரூ. 1 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் விற்பனை, கடத்தலை முற்றிலும் தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு ‘ஈழ்ன்ஞ்ஊழ்ங்ங்பச‘ எனும் செயலியை உருவாக்கியது. இச்செயலியின் மூலம் பொதுமக்கள் தகவல்களை அளிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நை. சிலம்பரசன் தெரிவித்தாா்.