சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

கோவில்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 7:57 pm

Syndication

கோவில்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி அறிஞா் அண்ணா தெருவில் வசித்து வரும் வித்யா, கடந்த மாதம் 25 ஆம் தேதி சென்னையில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது சகோதரா் ராமசாமி வெள்ளிக்கிழமை காலை, வித்யா வீட்டிற்கு சென்று பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த வெள்ளி விளக்கு, குங்குமச்சிமிழ் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.