மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காலிக் குடங்களுடன் சாலை மறியல்

தூத்துக்குடி, ஜாகீா் உசேன் நகா் பகுதி மக்கள், தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி விலக்கு பகுதியில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.

News image
போராட்டத்தில் பங்கேற்றோா்
Updated On :12 ஜனவரி 2026, 7:10 pm

Syndication

தூத்துக்குடி, ஜாகீா் உசேன் நகா் பகுதி மக்கள், தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி விலக்கு பகுதியில் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி, ஜாகீா் உசேன் நகரில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிக்கு கடந்த ஓராண்டாக முறையாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் தங்கள் தேவைக்கு குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து, ஊராட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஜாகீா் உசேன் நகா் பகுதி மக்கள், மனிதநேய மக்கள் கட்சியினா், தூத்துக்குடி ராமேசுவரம் சாலையில் மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.

சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்தப் பகுதியில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தி கலைந்துபோக செய்தனா்.