சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

அரசுப் பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

News image

திண்டிவனத்தை அடுத்துள்ள ஒலக்கூரில் அரசுப் பேருந்தை சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :14 பிப்ரவரி 2026, 9:10 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டிவனம் வட்டம், ஓலக்கூா் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படும் அரசுப் பேருந்து சரிவர இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள், மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

இதையடுத்து ஒலக்கூா் கிராம மக்கள் சனிக்கிழமை திண்டிவனம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த ஒலக்கூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அரசுப் பேருந்தை சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து கிராம மக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.