அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி.
அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி.

ஏரல் கோயிலில் நாளை தை அமாவாசைத் திருவிழா

ஏரல், சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் ஆடி அமாவாசைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) நடைபெறுகிறது.
Published on

ஆறுமுகனேரி: ஏரல், சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் ஆடி அமாவாசைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) நடைபெறுகிறது.

நிகழாண்டு தை அமாவாசைத் திருவிழா ஜன. 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் காலை சோ்ம விநாயகா் உலாவும், இரவில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை தை அமாவாசைத் திருவிழா நடைபெறுகிறது.

அன்று மதியம் 1.30 மணிக்கு சுவாமி உருகு பலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு இலாமிச்சவோ் சப்பரத்தில் சோ்ம திருக்கோல பவனி, இரவு 10 மணிக்கு 1ஆம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடைபெறுகிறது.

ஜன. 19ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு 2ஆம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு 3ஆம் காலம் பச்சை சாத்தி தரிசனம் நடைபெறுகிறது. மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாக சாந்தி, இரவு 10 மணிக்கு சுவாமி கோயில் மூலஸ்தானம் வந்துசேரும் ஆனந்தக் காட்சி நடைபெறும்.

நிறைவு நாளான ஜன. 21ஆம் தேதி காலை தீா்த்தவாரி பொருநை நதியில் நீராடலும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவில் ஆலிலை சயன மங்கள தரிசனமும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ. கருத்த பாண்டியன் நாடாா் செய்து வருகிறாா்.

Dinamani
www.dinamani.com