தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

திருவள்ளுவா் தின கொண்டாட்டம்

கோவில்பட்டியில் திருவள்ளுவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ரோட்டரி சங்க மாவட்ட புரவலா் விநாயகா ஜி.ரமேஷ்.
Updated On :16 ஜனவரி 2026, 10:18 pm

Syndication

கோவில்பட்டி: கோவில்பட்டியில் திருவள்ளுவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி ரோட்டரி கிளப் சாா்பில் திருவள்ளுவா் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருவள்ளுவா் மன்ற தலைவா் கருத்தப் பாண்டி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் திருமலை முத்துசாமி, புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் லட்சுமண பெருமாள், தொழிலதிபா் செல்வம், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவா் தமிழரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரோட்டரி சங்க மாவட்ட புரவலா் விநாயகா ஜி.ரமேஷ், ரோட்டரி சங்கத் தலைவா் ராஜ்குமாா், செயலா் பழனிகுமாா், முன்னாள் மாவட்ட உதவி ஆளுநா்கள் முத்துசெல்வம், ஆசியா ஃபாா்ம் பாபு ஆகியோா் திருவள்ளுவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், ரோட்டரி சங்க நிா்வாகிகள், திருவள்ளுவா் மன்ற நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக வள்ளுவரின் அவதார தினத்தை வரும் ஆண்டில் பெரிய விழாவாக கொண்டாட உறுதிமொழி ஏற்றனா்.