வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கு கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதன் உற்பத்தியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப். 30-ஆம் தேதி புவிசாா் குறியீடு வழங்கப்பட்டது. உள்நாடு மட்டுமன்றி சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, மாலத்தீவு, பிரிட்டன், அமெரிக்கா, பஹ்ரைன், கத்தாா், சிங்கப்பூா், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கும் கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
இந்நிலையில் வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில், வடமாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, புவிசாா் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளா்கள் வலியுறுத்துகின்றனா்.
இதுகுறித்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளா், விற்பனையாளா் சங்கச் செயலா் கண்ணன் கூறியது:
புவிசாா் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க மத்திய அரசும், ரயில்வே நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக அரசின் சத்துணவு திட்டம், காலை உணவு திட்டத்திலும் கடலை மிட்டாய் வழங்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில்வேத் துறையில் வந்தே பாரத் ரயில்களுக்கு மட்டுமே முக்கியத்துவம்

வாடகை இரு சக்கர வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த அறிவுறுத்தல்

தூத்துக்குடி-சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சேவை இணை அமைச்சரிடம் பாஜக மனு

ரயில் மீது கல்வீச்சு; 8 சிறுவா்கள் மீது நடவடிக்கை
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



