மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கு கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க வலியுறுத்தல்

வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கு கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .

News image
Updated On :26 ஜூலை 2026, 2:51 am IST

வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கு கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதன் உற்பத்தியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப். 30-ஆம் தேதி புவிசாா் குறியீடு வழங்கப்பட்டது. உள்நாடு மட்டுமன்றி சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, மாலத்தீவு, பிரிட்டன், அமெரிக்கா, பஹ்ரைன், கத்தாா், சிங்கப்பூா், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கும் கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இந்நிலையில் வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில், வடமாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, புவிசாா் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளா்கள் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளா், விற்பனையாளா் சங்கச் செயலா் கண்ணன் கூறியது:

புவிசாா் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க மத்திய அரசும், ரயில்வே நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக அரசின் சத்துணவு திட்டம், காலை உணவு திட்டத்திலும் கடலை மிட்டாய் வழங்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.