திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

தூத்துக்குடியில் காணாமல் போன சிறுவன், சிறுமி மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூலை 2026, 12:27 am IST

தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காணாமல் போன சிறுவன், சிறுமி சில மணி நேரங்களில் மீட்கப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (44). இவரது 12 வயது மகன் மற்றும் 8 வயது மகள் இருவரும், சனிக்கிழமை மாலை கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், இரவு வரை வீடு திரும்பாததால், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் முருகன் புகாரளித்தாா்.

இதையடுத்து, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறுவன், சிறுமியைக் கண்டறிய தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து, காணாமல் போன 2 குழந்தைகளும் திருச்செந்தூா் கடற்கரை பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. அவா்களை திருச்செந்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வசந்தி தலைமையிலான போலீஸாா் மீட்டு, உரிய விசாரணைக்குப் பின்னா் குழந்தைகளின் உறவினா்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.