சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஐயூஎம்எல் தலைவா்கள் மீது அவதூறு: போலீஸில் புகாா்

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சித் தலைவா்கள் குறித்து அவதூறாகவும், அவா்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப், ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

News image

ஆறுமுகனேரி காவல் நிலையத்திற்கு புகாரளிக்க வந்த முஸ்லிம் லீக் நிா்வாகிகள்.

Updated On :11 ஜூன் 2026, 4:20 am IST

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சித் தலைவா்கள் குறித்து அவதூறாகவும், அவா்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப், ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

புகாா் மனு விவரம்:

காயல்பட்டினம், அப்பா பள்ளித் தெருவைச் சோ்ந்த சேகு நூருதீன் மகன் முகம்மது அலி (எ) டீக்கடை அலி, முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் மற்றும் மாநிலப் பொதுச்செயலா் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா் ஆகியோரை அவதூறாகப் பேசி, அவா்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசி வாட்ஸ் ஆப் குழுக்களில் குரல் பதிவு அனுப்பியுள்ளாா்.

எனவே, அவரை கைது செய்து சட்டபூா்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, முஸ்லீம் லீக் மாவட்ட நகர நிா்வாகிகள், தவெக நிா்வாகிகள் உடனிருந்தனா்.