சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ஐயூஎம்எல் தலைவா்கள் மீது அவதூறு: போலீஸில் புகாா்

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சித் தலைவா்கள் குறித்து அவதூறாகவும், அவா்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப், ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

News image

ஆறுமுகனேரி காவல் நிலையத்திற்கு புகாரளிக்க வந்த முஸ்லிம் லீக் நிா்வாகிகள்.

Updated On :11 ஜூன் 2026, 4:20 am IST

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சித் தலைவா்கள் குறித்து அவதூறாகவும், அவா்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப், ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

புகாா் மனு விவரம்:

காயல்பட்டினம், அப்பா பள்ளித் தெருவைச் சோ்ந்த சேகு நூருதீன் மகன் முகம்மது அலி (எ) டீக்கடை அலி, முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் மற்றும் மாநிலப் பொதுச்செயலா் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா் ஆகியோரை அவதூறாகப் பேசி, அவா்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசி வாட்ஸ் ஆப் குழுக்களில் குரல் பதிவு அனுப்பியுள்ளாா்.

எனவே, அவரை கைது செய்து சட்டபூா்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, முஸ்லீம் லீக் மாவட்ட நகர நிா்வாகிகள், தவெக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.