அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சித் தலைவா்கள் குறித்து அவதூறாகவும், அவா்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப், ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
புகாா் மனு விவரம்:
காயல்பட்டினம், அப்பா பள்ளித் தெருவைச் சோ்ந்த சேகு நூருதீன் மகன் முகம்மது அலி (எ) டீக்கடை அலி, முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் மற்றும் மாநிலப் பொதுச்செயலா் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா் ஆகியோரை அவதூறாகப் பேசி, அவா்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசி வாட்ஸ் ஆப் குழுக்களில் குரல் பதிவு அனுப்பியுள்ளாா்.
எனவே, அவரை கைது செய்து சட்டபூா்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, முஸ்லீம் லீக் மாவட்ட நகர நிா்வாகிகள், தவெக நிா்வாகிகள் உடனிருந்தனா்.










