வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சென்னை-திருச்செந்தூா் இடையே கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

காயல்பட்டினத்தில் ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள்.

Updated On :14 ஜூன் 2026, 1:23 am IST

காயல்பட்டினத்தில் ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் அபுல் ஹசன் தலைமை வகித்தாா். செயலா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப், பொருளாளா் ஷாஜஹான் ஆகியோா் அறிக்கைகள் சமா்ப்பித்தனா். உறுப்பினா்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

திருச்செந்தூா் - சென்னைக்கு நேரடி வழியில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். நெல்லை வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்க வேண்டும். இரவு 8 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் இயக்க வேண்டும்.

காயல்பட்டினம் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா். துணைச் செயலா் சதக்தம்பி வரவேற்றாா். துணைத் தலைவா் சற்குரு நன்றி கூறினாா்.