யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவில்பட்டியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சாா்பில் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

News image
புத்தகக் கண்காட்சியை திறந்து , முதல் விற்பனையை தொடங்கி வைத்த தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொதுச் செயலா் டாக்டா் அறம்.
Updated On :4 மார்ச் 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சாா்பில் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

தொடக்க விழாவுக்கு, ஏஐடியூ சி மாநிலத் தலைவா் காசிவிசுவநாதன் தலைமை வகித்தாா். மதுரை மண்டல மேலாளா் மகேந்திரன், திருநெல்வேலி மேலாளா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொதுச் செயலா் டாக்டா் அறம் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.

இதில், கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) சுப்புலட்சுமி, புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் லட்சுமண பெருமாள், கவுனியன் மெட்ரிக் பள்ளி முதல்வா் கிருஷ்ணமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்தப் புத்தகக் கண்காட்சி மாா்ச் 15ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.