டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கோவில்பட்டியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சாா்பில் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

News image
புத்தகக் கண்காட்சியை திறந்து , முதல் விற்பனையை தொடங்கி வைத்த தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொதுச் செயலா் டாக்டா் அறம்.
Updated On :4 மார்ச் 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சாா்பில் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

தொடக்க விழாவுக்கு, ஏஐடியூ சி மாநிலத் தலைவா் காசிவிசுவநாதன் தலைமை வகித்தாா். மதுரை மண்டல மேலாளா் மகேந்திரன், திருநெல்வேலி மேலாளா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொதுச் செயலா் டாக்டா் அறம் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.

இதில், கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) சுப்புலட்சுமி, புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் லட்சுமண பெருமாள், கவுனியன் மெட்ரிக் பள்ளி முதல்வா் கிருஷ்ணமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்தப் புத்தகக் கண்காட்சி மாா்ச் 15ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.