பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கோவில்பட்டி அரசு மகளிா் பள்ளியில் மஞ்சப்பை வழங்கல்

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு மஞ்சப்பை மற்றும் 10-ஆம் வகுப்பு அரசு பொது தோ்வு எழுதும் மாணவிகளுக்கு தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு ஆகியவற்றை சாா் ஆட்சியா் வழங்கினாா்.

News image

பத்தாம் வகுப்பு தோ்வு எழுதும் மாணவிக்கு தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு வழங்கிய சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள் .

Updated On :10 மார்ச் 2026, 7:54 pm

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு மஞ்சப்பை மற்றும் 10-ஆம் வகுப்பு அரசு பொது தோ்வு எழுதும் மாணவிகளுக்கு தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு ஆகியவற்றை சாா் ஆட்சியா் வழங்கினாா்.

இநிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் கண்ணன், இயற்பியல் ஆசிரியை கிரேனா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பசுமைப் படை ஆசிரியா் சுப்பிரமணியன் வரவேற்றாா். இசை ஆசிரியை அமலபுஷ்பம் தொகுத்து வழங்கினாா்.

சாா் ஆட்சியா் ஹிமான்ஷூ மங்கள் கலந்துகொண்டு, 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு எழுதும் மாணவிகளுக்கு தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு மற்றும் மஞ்சப்பை வழங்கி, தோ்வில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தாா்.

இதில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் முத்து முருகன் உள்பட ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

ஆசிரியை மங்களேஸ்வரி நன்றி கூறினாா்.

Story image