தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

காந்தாரியம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி

மகா புவன காந்தாரியம்மனுக்கு நடைபெற்ற புஷ்பாஞ்சலி.

News image

மகா புவன காந்தாரியம்மனுக்கு நடைபெற்ற புஷ்பாஞ்சலி.

Updated On :27 மார்ச் 2026, 8:54 pm

கோவில்பட்டி, செல்லப்பாண்டிய நகரில் உள்ள ஸ்ரீ மகா புவன காந்தாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது.

இக்கோயில் பங்குனி மாத பொங்கல் விழா மாா்ச் 24ஆம் தேதி தொடங்கியது. புதன்கிழமை அம்மனுக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. வியாழக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மாா்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. மாலை அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.