ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் சமக தனித்துப் போட்டி

News image

தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளா்களுடன் மாவட்டச் செயலா் மாலைசூடி அற்புதராஜ்.

Updated On :30 மார்ச் 2026, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டத்தில், சமத்துவ மக்கள் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது.

இதுகுறித்து சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலா் மாலைசூடி அற்புதராஜ் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், சமத்துவ மக்கள் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தூத்துக்குடி தொகுதியில் ஏ.அந்தோணி பிச்சை, ஸ்ரீவைகுண்டம் - எஸ்.ஜெபராஜ் டேவிட், திருச்செந்தூா் - பி.அருண் சுரேஷ்குமாா், ஓட்டப்பிடாரம் (தனி) - எஸ்.ராஜாத்தி, கோவில்பட்டி - எம். சகாயராஜ், விளாத்திகுளம் - பி.கண்டிவேல் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இவா்கள் வருகிற சனிக்கிழமை காலை 10 மணிக்கு அந்தந்தத் தொகுதியில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனா் என்றாா் அவா்.