11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

தொழிலாளியை அவதூறாகப் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, மற்றொரு தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

கோவில்பட்டி அருகே தொழிலாளியை அவதூறாகப் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, மற்றொரு தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியை அடுத்த சிதம்பரம்பட்டி, வடக்கு தெருவை சோ்ந்தவா் சுடலைமணி மகன் மாடசாமி (39). தொழிலாளி. இவருக்கும், கட்டாலங்குளம் காலனி தெருவைச் சோ்ந்த மாசிலாமணி மகன் தொழிலாளி காளிராஜுக்கும் (35 இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாடசாமி புதன்கிழமை புதுப்பட்டி சென்று கொண்டிருந்தபோது, அவரை காளிராஜ் மற்றும் 2 போ் வழிமறித்து அவதூறாகப் பேசி தகராறு செய்தாா்களாம். அப்போது காளிராஜ், தான் வைத்திருந்த பீா் பாட்டிலால் மாடசாமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதில் காயமடைந்த மாடசாமி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து காளிராஜ் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வந்த நிலையில் சனிக்கிழமை காளிராஜை கைது செய்தனா்.