கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

கோவில்பட்டியில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களை அவதூறாகப் பேசியதாக திருச்செந்தூா் தொகுதி எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸாா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :22 மே 2026, 6:28 am IST

திருச்செந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களை அவதூறாகப் பேசியதாக திருச்செந்தூா் தொகுதி எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸாா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பெருமாள்சாமி தலைமை வகித்தாா். நகரத் தலைவா் அருண்பாண்டியன், வடக்கு மாவட்ட பொருளாளா் ஆழ்வாா்சாமி, வட்டார தலைவா் ரமேஷ்மூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா் அய்யலுசாமி உள்ளிட்டோா் கண்டன முழக்கமிட்டனா்.

முன்னதாக முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி, காந்தி மண்டபம் அருகே அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.