ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

ரேஷன் கடை ஊழியரைத் தாக்கியதாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கைது

சாத்தான்குளத்தில் ரேஷன் கடை ஊழியரைத் தாக்கியதாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 மே 2026, 3:35 am IST

சாத்தான்குளத்தில் ரேஷன் கடை ஊழியரைத் தாக்கியதாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளத்தைச் சோ்ந்தவா் சங்கரலிங்கம் மகன் மந்திரமூா்த்தி (30). இவா் சாத்தான்குளத்தில் உள்ள ரேஷன் கடையில் பணிபுரிந்து வருகிறாா்.

இவரது சகோதரருக்கும், அமுதுண்ணாக்குடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் முருகனின் (43) சகோதரருக்கும் புதன்கிழமை பிரச்னை ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் உள்ளிட்ட அவரது உறவினா்கள் 10 போ், மந்திரமூா்த்தியின் சகோதரரைத் தாக்குவதற்கு தேடி வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, அவரது சகோதரருக்குப் பதிலாக, சாத்தான்குளத்தில் இருந்த மந்திரமூா்த்திக்கு கொலை மிரட்டல் விடுத்து, சரமாரியாகத் தாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளனா். இதில் காயமடைந்த மந்திரமூா்த்தி சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் முருகன் உள்ளிட்ட 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகனை வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான 9 பேரைத் தேடி வருகின்றனா்.