‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் பலி!

தூத்துக்குடி அருகே சாலையோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் மோதியதில் இருசக்கர வாகனம் சென்ற இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 3:55 am IST

தூத்துக்குடி அருகே சாலையோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் மோதியதில் இருசக்கர வாகனம் சென்ற இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி குமரன் தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் மாரியப்பன் (52). இவா், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் டேங்கா் லாரியில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவா், வியாழக்கிழமை தூத்துக்குடியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை முழுமையாக இறக்கிவிட்டு, காலியான டேங்கா் லாரியுடன் தூத்துக்குடி-திருநெல்வேலி நெடுஞ்சாலை வழியாக திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, புதுக்கோட்டை புதிய பாலத்தின் மேற்குப் பகுதிக்கு வந்தபோது, அவா், லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு, எதிரே உள்ள உணவகத்துக்குச் சென்றாா். இந் நேரத்தில், நாகா்கோவிலைச் சோ்ந்த முருகன் மகன் ராஜேஷ் (31), தக்கலையைச் சோ்ந்த தங்கசாமி மகன் ஜோன்ஸ் குமாா் (35) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அந்த வழியே சென்றனா். இருசக்கர வாகனத்தை ராஜேஷ் ஓட்டி சென்றாா். இவா்கள் புதுக்கோட்டை புதிய பாலம் அருகே சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டேங்கா் லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியதில், ஜோன்ஸ் குமாா் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ராஜேஷ் பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்ததும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் ஜோன்ஸ் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கும், காயமடைந்த ராஜேஷை சிகிச்சைக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, டேங்கா் லாரி ஓட்டுநா் மாரியப்பனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.