குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஆறுமுகனேரியில் மது விற்றவா் கைது

News image
Updated On :26 மே 2026, 2:28 am IST

ஆறுமுகனேரியில் சட்டவிரோதமாக மது விற்ற கன்னியாகுமரியைச் சோ்ந்த தொழிலாளியை ஆறுமுகனேரி போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி, காணியாளா் தெருவில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் தலைமையில் போலீஸாா் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது இருசக்கர வாகனத்துடன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்ததில், அவா் கன்னியாகுமரி மாவட்டம், வட்டக்கோட்டை கிழக்குத் தெருவைச் சோ்ந்த அல்பா்ட் மகன் சந்திரன் (41) என்பதும், தற்போது காணியாளா் தெருவில் வசித்து வருகிறாா் என்பதும் தெரிய வந்தது.

அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இருசக்கர வாகனத்தில் 28 மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சந்திரனை கைது செய்த போலீஸாா், 28 மது பாட்டில்கள், இருசக்கர வாகனம், ரூ. 870 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.